Thursday, November 20, 2008

ஏன் இப்படி...?


நடந்ததை மறந்திட
மனதொன்று இருந்திடின்
அவன் பெயர் இறைவனடி...

நிகழ்வதை நினைத்திட்டே
மனமது உருகிடின்
அவன் பெயர் மனிதனடி...

மனதினில் வலியதை
சுமந்திட்டே இருப்பவன்
சுமைகளின் சிகரமடி...

சுமைகளை ஒதுக்கி
விடிவதை தேடிடின்
மனிதனில் புனிதனடி...

சுமையுன்னை சூழ்ந்திட
வாழ்வதை மாய்த்திடின்
வாழ்க்கையே போலியடி...

உனக்கென்ன சக்தியென
உனை நீ புரிந்துகொள்
வாழ்வின் சுவை புரியும்...

அருகதையில்லை
உனக்கிது சொல்ல...
இருப்பினும்
வலியிருக்கு எனக்கும்...
உன்மீது அக்கறையிருக்கு
உயிரினும் மேலாக...

வேதனையில் மதியுன்னை
பார்க்கும் சக்தி இந்த
மதுவுக்கில்லை...

No comments: