Wednesday, December 31, 2008

விடைபெறு 2008

எத்தனை துன்பங்கள்
அத்தனையும் தந்து
மொத்தமாய் பரிதவித்து
பித்தனாய் சுற்றவைத்தாயே...

யுத்தத்தின் கோரங்கள்
சத்தத்தின் அவலங்கள்
எத்தனை துன்பமடா...?
அத்தனையும் கடந்தங்கே
சந்தோஷ நினைவலைகள்
ஆழ்மனதில் நிழலாட
நிலாவொளியில் நீ வாடுகிறாய்...

தீராத வேதனைகள்
புரியாத சோதனைகள்
எத்தனைதான் தாங்குமெந்தன்
புண்பட்ட நெஞ்சமிது...
கொஞ்சமாவது இரக்கம் காட்டி
சொர்க்கமதை அருகில் காட்டு...

அநியாய கொலைகளால்
அநாதைகள் அதிகரிக்க
காதல் பிரிவுகளால்
இதயங்கள் சிதறடித்தாய்...
உருண்டையான உலகத்தை
இருண்டதாய் மாற்றிடவே
உலகத்து சமநிலையை
சிலநேரம் குழப்பிவிட்டாய்...
ஈரமில்லா நெஞ்சங்களை
கொஞ்சநேரம் குளிரவைக்க
கடலுக்குள் இழுத்துச் சென்றாய்...
இத்தனையும் செய்துவிட்டாய்
வாழ்க்கையின் இன்பமதை
திருப்பித்தாராயோ...?

நீங்காத சொந்தமதை
இவ்வாண்டில் மீட்டுவந்தாய்...
துன்பத்தை குழிதோண்டி
புதைக்கவைத்தாய்...
போகின்ற இரண்டாயிரத்தெட்டே
உன் உளம்தொட்டு வாழ்த்திவிடு
என்னவள் மனம்தொட்டதுபோல்
கரம்பிடித்து வாழவேண்டுமென...!

No comments: