Tuesday, December 16, 2008

நிலாச்சோறு...

முழுநிலவின் முன்னாலே
முத்தங்கள் பரிமாறி
மொத்தமாய் உன்னை
அணைத்திடத்தான் தவிக்கிறது
பித்தனின் உள்ளமிது...

மாடியில் உனைத்தேடி
ஓடிவந்த வேளையிலே
முழுநிலவு சாட்சி சொல்லும்
மீதிக்கதை கேட்டுப்பார்...
முத்தான உன் வியர்வை
முகத்தோரம் வடிகையிலே
முத்தத்தால் துடைத்திடவே
உள்மனது துடிதுடிக்கும்...

பாழ்பட்ட உலகத்திலே
பார்த்தாலே பாவமென
பலகதைகள் சொல்லிடுவர்...
உலகத்து நியதியிலே
நியாயங்கள் கண்டதனால்
நிஜமான உணர்வுகளை
நிழலாக நீந்தவிட்டு
நித்திரையில் நித்தமும்
நிலாச்சோறு உண்கின்றேன்...

No comments: