Tuesday, December 02, 2008

பிடித்ததை செய்திடு...

உண்மையை உணரும்
காலம்மட்டும் உறவுகள்
எம்மை தொடர்வதில்லை...
விக்கும் வேளையில் தண்ணீராய்
சிக்கும் வாழ்வில் விடியலாய்
பாசத்தின் பிணைப்பிருக்கும்...

இருக்கின்ற பொழுதில்
வாழ்வில் பிடிப்பிருக்காது...
பிரிகின்றபொழுதில்
நெஞ்சில்துடிப்பிருக்காது...
யதார்த்தத்தின் வாழ்வை
யார்தான் புரிந்திடுவர்...?
உண்மைகள் கசக்கும்
வாய்மைகள் பொய்க்கும்
இதுதான் யதார்த்தமென்பர்...
நினைவுகள் நம்மை
சீண்டும்பொழுதில்
நிம்மதி கிடைக்காது...
நிஜத்தினில் வாழ்கையில்
நினைவுகள் இனித்திட்டால்
நிம்மதி உனக்கேது...?

உறவுகள் பிரிந்து
ஊமைகளாகிட்ட
வாழ்வினில் இனிப்பேது...?
சொந்தத்தின் அந்தம்வரை
பாசத்தின் பிணைப்பிருக்கும்...
சோகத்தில் துவண்டாலும்
வேஷமில்லா அன்பிருக்கும்...
இதுதான் வாழ்வென
எப்படிச் சொன்னாலும்
உருப்படி கிடையாது...
பிடித்ததை செய்திடு
தடைகளை உடைத்திடு
வாழ்வினில் வசந்தம்வரும்...

No comments: