Tuesday, May 07, 2013

ஆடாத ஆட்டம்...



இருக்கின்ற போதெல்லாம்
இறுக்கமாய் நீயிருந்தாய்...
இல்லையென்று ஆனபின்பும்
இன்னுயிராய் நீயிருக்காய்..!!!

வேரறுத்து வெட்டிவிட்ட
வேப்பமரம் நானில்லை...
வெதுவெதுப்பாய் தவிக்குதடி
வேண்டிநிற்கும் என்னுள்ளம்..!!!

மடிசாய்ந்து கதைபேசி
படிதாண்டிய வாழ்க்கையிது...
துடிதுடித்து சாவதற்கா
புடைபோட்டோம் தங்கமிதை..?!!

கோடிசொந்தம் சுற்றியிருந்தும்
தேடிவந்த செல்வம் நீயடி...
ஆடாத ஆட்டத்திலே
அரைநடுவில் போவதேனடி..?!!

No comments: