Friday, January 09, 2009

அருவி...

அருமையான அருவியிலே
அணுவணுவாய் நனைந்திடவே
ஆழ்மனதில் ஆசை பொங்கும்...
என்னவளும் அருகிலிருந்தால்
பொங்கும் ஆசை பூத்துக் குலுங்கும்...

பாறையிலே தவழ்ந்துவரும்
நீர்த்துளிகள் பார்க்கையிலே
உன்னோடு நான்பேசும்போது
மார்போடு வழிந்தோடும்
வியர்வைத்துளி நினைவுவரும்...

புரியாத ஓசையினை
அருவியிலே நான் கேட்பேன்...
நீபாடும் பாடல்கள்
என்காதில் எதிரொலிக்க,
தாளத்தை அருவி போடுவதாய்
உளமார நானுணர்வேன்...

ஆனந்தமாய் கைகோர்த்து
அருவியிலே நாம் நனைந்தால்
வெட்கித்தான் திரும்பியோடும்
கீழிறங்கும் நீர்த்துளியும்...

தூறல்களில் துள்ளியோடும்
மான்குட்டியாய் நீயிருக்க
பாரங்கள் பறந்துபோகும்
மனதுக்கும் சிறகுமுளைக்கும்...

முளைத்திட்ட சிறகதனால்
உலகத்தை சுற்றிவர
பலமாக நீ வேண்டும்
உளமார கேட்கின்றேன்
நிஜமாக நீ வாராயோ...?

No comments: