Thursday, January 22, 2009

குளிர்காற்று...

பலகால நினைவுகள்
பவளமாய் என்மனதில்
துயில்கின்ற இரவில்
மயிலிறகாய் தடவிடுமே
விடிகாலை குளிரது...

உள்ளத்தின் உணர்வுகள்
சில்லிடும் சிலிர்ப்பில்
மிதிர்வான சீண்டுதலாய்
குளிர்காற்று தழுவிடுமே...
நினைவோடு நிஜங்களும்
நிம்மதியாய் சிலிர்த்திடும்
ஜில்லென்ற குளிர்காற்றில்...!

மனதோர மயக்கத்தை
இயக்கமின்றி தடுத்திடவே
தயக்கமின்றி உள்நுழையும்
மாயக்காரன் நீயா...?
தூய சிந்தனையை
பாய்விரித்து உறங்கவைக்க
இரக்கமின்றி துரத்திறாயே...

என்னவளின் நினைவென்ற
நிம்மதிப் போர்வையில்
புதைந்துதான் பார்க்கின்றேன்,
வதைக்கின்ற குளிர்காற்றே
பகைக்காதே போய்விடு..!
இதமான நினைவுகளை
இறுக்கமாக்கும் குளிர்காற்றே,
வதைக்காதே போய்விடு...

விடிகாலை நினைவோடு
மேனிதழுவும் குளிர்காற்றில்
ஆற்றோரம் நடைபயில
தேக்கமாய் நினைவுகள்
புதைந்துதான் கிடக்கின்றன...
குளிர்தண்ணி கையேந்தி
மேல்தனில் தெளிக்கையில்
ஜில்லிடும் உடல்
உள்ளமும் ஊமையாகும்..!

கரம்பற்றும் வாழ்வதனை
கனவுலகில் வாழ்கின்றேன்...
நிஜமாகும் நேரமதை
நினைத்துத்தான் பார்க்கையில்
குளிரின்றி மயிர்சிலிர்க்கும்,
உள்ளத்தில் ஒளி பிறக்கும்...!

No comments: