Monday, January 26, 2009

தொடுகை...

செத்துவிட தோனுதடி
உந்தன் மடிதனிலே...
மானுடனாய் வாழவைத்த
தங்கரதம் நீயல்லவோ...

காலங்கள் கரையுதென
எத்தனைமுறை கலங்கியும்
தெளிவில்லா வாழ்வதனை
உன்மடியில் தொலைத்திடவே
உள்மனது ஓடிவரும்,
தெளிவில்லா குழப்பத்தை
குழந்தைச் சிரிப்பில்
புதைத்துவைக்கும் என்னவளே,
உன் மாயம்தான் என்னதடி...?

உன் புருவ இடுக்கில்
எனை இதமாய் இருத்தி
உரத்தே சொல்லிடுவாய்
உன்னவன் நானென்று...
என்னைநான் நொந்திடுவேன்
உண்மையாய் வாழ்ந்திடவே...

தொடுகையற்ற காதல்தான்
வடுவற்றதென்கிறாய்...
என் உள்ளத்தை தொட்டதனால்
நீதான் என்னவளானாய்...!
இப்பொழுது சொல்லிவிடு,
தொடுகை இதமானதா இறுக்கமானதா?

No comments: