Thursday, January 15, 2009

வலம்புரி...

வலம்புரியாய் நீயிருக்க
இடர்தனில் நான் தவிக்க
மரணத்து சங்கோசை
சந்தோஷமாய் கேட்குதடி
வசைபாடும் உள்ளங்களின்
கன்றாவி காதுகளில்...

கோள்காவும் கோமாளிகளின்
கேலிப் பேச்சுகளில்
குளிர்காயும் பலருக்கு
உண்மை அன்பு உவர்ப்புத்தான்...
உவர்ப்பினிலே வாழ்கின்ற
வலம்புரி சங்காக
நீயென்னை சுற்றி இருக்குமட்டும்
உளம்குளிரும் எந்நாளும்...

அன்புக்கு இலக்கணம்தெரியா
ஈரமில்லா நெஞ்சங்களுக்கு
பாரமாகத்தானிருக்கும் நம்மன்பு...
உண்மையான உலகத்தினை
அன்பினிலே அறிந்திடலாம்...
பண்பில்லா பரதேசிகளின்
பார்வைகள் நம்மீது பட்டாலே
கோவம்தான் நமைச்சூழும்...

பாவம் அவர்கள்...
பிழைத்துப்போகட்டும்!
தளைத்துக்கொள்ளும் நம்மன்பு
கவலையில்லை எங்களுக்கு...
உள்ளத்தில் நீயிருக்க
ஊருக்கு ஏன் கவலை...?
காலங்கள் கனிந்துவிட்டால்
வையமே நம்பக்கம்
வைத்தகண் வாங்காது..!

1 comment:

Anonymous said...

nice poem