Friday, January 30, 2009

ரோஜா மலரே...

புன்னகைப்பாய்
பூவைப் பார்த்து...
உன்விரலால்
வீணை மீட்டுவாய்
நாதம் வாசனையாய்
பரவிவரும்..!

உன் முத்தம் பெற்றிடவே
வாடியதாய் நடிக்கிறது
ரோஜா பூக்கூட...!
நானும்தான் நடிக்கின்றேன்
எட்டிநின்று கேட்கிறாய்
'ஏன் வாடியிருக்கிறாய்?'

தன் இதழ் விரிக்கும்போது
ஆனந்தக் கண்ணீரால்
பன்னீர் தெளிக்கிறாய்...
புன்னகைக்கும் ரோஜா,
உன் அணைப்பை எண்ணி!

ரோஜாவின் அங்கமெலாம்
உன்விரல் வீணை மீட்டும்...
என்னைமட்டும் எதற்காக
தொடுவதற்கே தயங்குகிறாய்..?

உதிர்கின்ற இதழ்களையே
பதிவேட்டில் பதிக்கின்றாய்...
உன்னைத் தொட்டால்
முறைக்கின்றாய்...
ரோஜாவைத் தொட்டால்
பதைக்கின்றாயேடி...

உன் முத்தம் வாங்கிடவே
பருவத்தை மீறி பூக்கிறது
உன் வீட்டு ரோஜா செடி...
தன் இதழ்களின் மென்மைதனை
சோதிக்கிறதாம் உன் இதழ்கள்...
மலர்கூட வெட்கித்து புலம்பிடும்
'மென்மை என்பதன்
பெயரை மாற்றுங்கள்...'

No comments: