Friday, January 16, 2009

அன்பு...

சிரிக்கவேண்டும் போலிருக்கு
சிந்தைகெட்ட மானுடமெண்ணி...
நெஞ்சிலுள்ள சோகங்களால்
சிரிப்புக்கூட சினமாகுது...!
வஞ்சம்தனை நெஞ்சில் சுமந்து
கொஞ்சிப்பேசும் உறவுகளை
வேரறுக்க மனம்துடிக்கும்,
வீண்பழி உனைச்சேருமென
அடக்கிக்கொள்வேன் மனமதுவை...

பொறுமைகொள்ளும் உரிமைகூட
அடக்குமுறை ஆகிறதே...
அன்பிற்கு அடிபணியும்
பண்பெனதென்பதால்
அடக்கிடத்தான் நினைக்காதீர்...
உண்மை அன்பு எங்களது,
ஆகையினால் உங்கள் கோள்கள்
கேவலமாய் போயிடுமே...!

சிரிக்கின்ற முகத்தின் பின்னால்
சீற்றமும் ஒழிந்திருக்கும்...
பொறுமையோடு அடக்கிவைக்க,
வெறுமையானவன் என்றெண்ணி
கொச்சைப்படுத்தாதீர் அன்பிதனை...
வருங்காலம் நமதாகும்,
அதுவரை நம் அன்பிருக்கும்..!

No comments: