Tuesday, January 27, 2009

சீண்டல்...

உன் ஒருதுளி கண்ணீரில்
என் ஓராயிரம் ஆத்திரங்கள்
அர்த்தமிழக்கின்றன...

அடங்காத ஆசைகூட
அடங்கித்தான் போகிறது
உன் கடைக்கண்
பார்வையிலே செல்லமே...

செல்லமாக இருந்தென்னை
வலியின்றி கொல்கிறாய்...
நான் பாவமில்லையடி
நீதான் வலிதாங்கமாட்டாய்...

கோவமாக இருப்பதாக
இறுக்கமாக நீ சொல்வாய்...
பாவமாக உனைப்பார்ப்பேன்
அணைக்கப்போவது நானல்லவோ?

மூர்க்கமான வார்த்தைகளை
முணுமுணுக்கும் வேளையிலே
தர்க்கத்தில் நீ குதிப்பாய்...
விக்கித்திப் போய் நிற்பேன்
உன் விம்பம் பார்த்துத்தான்...

சுகமான சண்டைகளை
வேண்டாமென்றாலும்
நீ தொடுப்பாய்...
கடுப்பாகி திட்டிவிட்டால்
கண்ணீரால் கதை சொல்வாய்...

என்னை சீண்டிப்பார்ப்பதில்
நீ தடைதாண்டியவள்...
என் கோவத்தை நீ ரசிப்பாய்,
சீண்டும் உன்னை
சிகரத்தில் நான் பதிப்பேன்...

No comments: