Friday, January 09, 2009

செல்போன்...

காதுக்கடியென
கையடக்க தொலைபேசியை
தொல்லையாக சொல்லிடுவர்
உள்ளத்தை உண்மையாக
உணர்ந்திட மறந்தவர்கள்...

காதலுக்கு சாட்சியாக
ஆடையில்லா ஆண்டியாக
எம்மோடு ஒட்டிவந்து
காதோரம் சூடாக்கும்
சூட்சுமக்காரன்...

இனிமையான வார்த்தைகளை
இனிப்பாக காதோரம்
சொல்லிவைப்பாய்...
என்னவளை என்னருகில்
முத்தமிட அழைத்துவருவாய்...
உன்னை ஏன் தொல்லையென
தள்ளி வைக்கின்றார்கள்...?
செல்லமாக இணைந்திருக்கும்
செல்போன் நீயல்லவோ...

இலக்கங்கள் தேயுமட்டும்
உன்மேனிதனை தடவியே
உயிர்மட்டும் மிச்சம் வைத்து
உள்ளதெல்லாம் உறிஞ்சிவிட்டேன்...
என்னவளை என் காதோரம்
சேர்த்து வைத்த செல்போனே...
என் முத்தங்களை மொத்தமாய்
சுவைத்திட தருகிறேன்
உறங்கித்தான் போயிடாதே...
என்னவளின் குரல் அழைத்தால்
ஓடிவந்து சொல்லிவிடு...!

4 comments:

Anonymous said...

Romba feel panni eluthi irukinga pola.. thanka mudiyala .....Hi... Hi...(Pls thamila type panni podunga....)

reka

A.P.Mathan said...

ரொம்ப பீல் பண்ணி எழுதியிருக்கீங்க போல... ஹி... ஹி... ஹி... (ரேகா). நீங்க சொன்னபடியே தமிழிலையும் எழுதியிருக்கன். உண்மைதானே ரேகா... ஒவ்வொருத்தருக்கும் நிறைய பீலிங்ஸ் இருக்கும்தானே. நீங்க இதெல்லாம் அனுபவிக்கலையோ..?

A N A N T H E N said...

//இலக்கங்கள் தேயுமட்டும்
உன்மேனிதனை தடவியே
உயிர்மட்டும் மிச்சம் வைத்து
உள்ளதெல்லாம் உறிஞ்சிவிட்டேன்...//

அய்யோ பாவங்க உங்க மோபைல்...
உங்க காதல் இன்னும் போன் அளவில மட்டும்தான் இருக்குதுங்களா?
விரைவில் நேரிலும் மலர்ந்து வெற்றி அடைய வாழ்த்துகள்

kajan said...

இது நீங்கள் கிறுக்கியதல்ல.வரைந்தது.அந்தலாவு நல்லா இருக்குங்க