Tuesday, January 06, 2009

காதல்கறை...

தொன்னூற்றி ஒன்பதில்
எனக்கு நீ செல்லப்பிள்ளை...
தொன்னூற்றொன்பதாவது பதிவில்
உனக்குநான் என்னசொந்தம்..?
விருப்பற்ற வேண்டாதவனா...
செருக்குள்ள தெருப்பொறுக்கியா?
சுருக்கமாய் சொல்லிவிடு
இல்லையேல் சுருக்கிட்டு கொன்றுவிடு...

காதலென்ற கறைதனை
கைக்குட்டையால் துடைத்தெறி...
கரைசேரா வாழ்வதனில்
காதல் கறைமட்டும் எதற்காக..?
கருவறையில் கரைக்காத காதலிதை
உருமாற்றம் செய்யாதே...
உண்மையான அன்பிருந்தால்
உரிமையோடு திட்டிவிடு
உணர்வோடு கேட்கின்றேன்...
இல்லையேல் உதறிவிடு,
ஒட்டாத கடிகாரமுள்ளாய்
எட்டவே இருப்பதைவிட
உயிரோடு புதைகிறேன் மண்ணில்..!

1 comment:

தேவன் மாயம் said...

உரிமையோடு திட்டிவிடு
உணர்வோடு கேட்கின்றேன்...
இல்லையேல் உதறிவிடு,
ஒட்டாத கடிகாரமுள்ளாய்
எட்டவே இருப்பதைவிட
உயிரோடு புதைகிறேன் மண்ணில்..!///

உணர்வோடு எழுதியுள்ளீர்கள்!!!
வரிகளில் தீ

தேவா..