Friday, November 21, 2008

சிதறிய இதயம்...

இதயமது இருக்குமட்டும்
இடர்களும் தொடருமடி...
தொடர்கின்ற இடர்கள்
படர்ந்துசென்று பரிகசிக்கும்
பாவியிவன் முகம்பார்த்து...

கட்டவிழ்ந்த சிந்தனையை
குட்டுப்போட்டு அடக்கிடவே
அசரீரியாய் ஒலித்திடுமே
அங்காங்கே பல குரல்கள்...

தேவையுந்தன் அன்பெனவே
சிந்தைகலங்க காத்திருப்பேன்
எந்தனுயிர் பிரிந்துவிட்டால்
ஆவியாக உனைத்தொடர்வேன்...
ஆயுள்வரை வாழவேண்டும் - இல்லை
ஆவிதுறந்து சாகவேண்டும்...

சோகம்தான் வாழ்க்கையென்றால்
சாவுதான் நண்பனென்பேன்...
சுக்குநூறாய் உடைந்தபின்னும்
இதயத்துள் நீயிருப்பாய்...
சொட்டும் உதிரத்தின் பக்கத்தில்
கொட்டும் என் காதல் முரசு...

கிடைக்கின்ற அன்பதனை
தடுக்கின்றான் படைத்தவன்...
மடைதிறந்த வெள்ளமாய்
பெருக்கெடுக்கும் அன்பிதனை
சுருக்கிட்டு கொலைபண்ண
மனமிதுதான் இடம்தருமா...?

சேராத காதலென
கேலியாக சொன்னாலும்
தாங்குதில்லை எந்தன்நெஞ்சமடி...
உன் நெஞ்சோடு முகம்புதைத்து
சோகங்கள் பகிரவேண்டும்
காலங்கள் கனிந்துவர
கனகாலம் காத்திருப்பேன்...

No comments: