Friday, November 21, 2008

கருவின் நிஜம்...

என்னமோ தெரியலைங்க... எனக்கு சின்னச்சின்ன விசயங்களிலேயும் அதிகமா ஈர்ப்பு வந்திடும். சில சமயங்களில சின்னச்சின்ன எறும்புங்க ஊர்ந்து திரியிறதயே ரசிச்சிட்டிருப்பன். இத வாசிக்கிறவங்களுக்கு போலியான வர்ணணையா தெரிஞ்சாலும் எனக்கு அதாங்க உண்மை.

அண்மையில எனக்கு ஒரு மெயில் வந்திச்சு... சாதாரணமா நாங்க பாக்கிற கோழி குஞ்சினுடைய பரிணாம வளர்ச்சி... அந்தப் படங்கள பார்த்ததும் எனக்கு பழைய சில ஞாபகங்கள் வந்திச்சுங்க... நம்ம ஊரு பக்கங்களில எப்பவுமே வீட்டில ஆடு, மாடு, கோழி அப்படின்னு கட்டாயமா வளப்பாங்க. இதில சுவாரஸ்யம் என்னென்னா கோழிக்கு அடை வைக்கிறதுதானுங்க...

ஒவ்வொரு முட்டையிலையும் எங்களோட பெயர எழுதி, கோழிக்கு அடை வைப்போம். அதுக்கப்புறமா தினமும் அந்த முட்டைங்கள பரிசோதிக்கிறதுதான் நம்மளோட வேலை. மொத்தம் 21 நாட்கள் அடை வைக்கனும். 14 நாட்கள் கழிச்சு அடை வைச்ச முட்டைங்கள தண்ணியில போட்டு மிதக்குதா என்டு பார்ப்போம். அப்படி மிதக்கலைனா அது குஞ்சில்லைன்னு அர்த்தம். சில சமயங்களில நம்மட பெயர் எழுதின முட்டை மிதக்கலைன்னா கோழிக்கு இருக்கிற கவலையவிட நம்மளுக்கு அதிகமா இருக்கும். இப்படியே கோழிய விட அதிகமா அக்கறை எடுத்து, 21 நாட்கள் கழிச்சு குஞ்சு பொரிக்கும் பாருங்க... அந்த சந்தோஷத்த வார்த்தைகளால சொல்ல முடியாது. அனுபவிச்சவங்களுக்கு இப்பொழுது நினைச்சாலும் நெஞ்சு கனக்கும்... (என்னங்க உங்களுக்கும் நெஞ்சு கனக்குதா...?).

அப்புறமா கோழிக் குஞ்சுங்களுக்கு டை பூசி பத்திரமா வளர்த்தெடுக்கிறது பெரிய சந்தோஷம். அப்படி ஒரு காலம் எப்ப வருமுன்னே தெரியலை... ம்ஹூ... பெருமூச்சு விடறத தவிர வேற என்னததான் செய்ய... சரிங்க... இப்போ இந்த படங்கள பாருங்க. 21 நாட்களும் எப்படி முட்டையிலிருந்து கோழிக் குஞ்சு உருவாகுதின்னு...

No comments: