Monday, January 12, 2009

66th Annual Golden Globe Awards

புகழ் என்பது பலருக்கு சில சமயங்களில் மட்டும்தான் கிடைக்கும். ஆனால் இவருக்கோ புகழ் என்பது கேட்காமலே இவரை வந்து சேர்கிறது என்றால் மிகையாகாது. விருதுகள் வாங்கி வாங்கியே புகழின் உச்சியில் இருக்கின்றார். அவர் வேறுயாருமல்ல, அவர்தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ஏராளமான தேசிய விருதுகளுக்கும், சர்வதேச விருதுகளுக்கும் சொந்தக்காரர். அண்மையில் உலகத்தையே தன்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றார். 'Slumdog Millionaire' என்ற படத்திற்கான இசையில் Best Original Score என்னும் பிரிவில் Golden Globe விருதினை வென்றிருக்கிறார். இந்த விருதினைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையும் இவரைச் சேருகின்றது.

'Slumdog Millionaire' என்ற படத்தினை Danny Boyle என்பர் இயக்கியிருக்கிறார். மும்பையின் சேரிப்புறத்தில் இருக்கின்ற சிறுவன் ஒருவன் பணக்காரனாவது பற்றிய கதைதான் இது (ஒருவரிக்கதை இதுதான்). Simon Beaufoy என்பவர் இதன் திரைக்கதையினை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவாளராக Anthony Dod Mantle என்பவர் கடமையாற்றியிருக்கிறார். எடிட்டிங்கில் புகுந்து விளையாடியிருக்கிறார் Chris Dickens என்பவர் (ஒரு பாடல் பார்த்தேன் சூப்பரா இருக்கு எடிட்டிங்). உலகத்தின் மூன்றாவது மிகப்பெரிய விருது வழங்கும் விழாவாகக் கருதப்படுவது Golden Globe Awards ஆகும். 1944ஆம் ஆண்டுமுதல் இந்த விருதுவழங்கும் விழா நடைபெற்று வருகின்றமை சிறப்பானதாகும். இம்முறை நடைபெற்றது 66ஆவது விருது வழங்கும் விழா. Hollywood Foreign Press Association (HFPA) என்னும் அமைப்பே இந்த விழாவினை ஒவ்வொரு வருடமும் நடத்திவருகின்றது.

'Slumdog Millionaire' என்ற இந்தப் படம் Vikas Swarup என்பவரின் Q and A என்ற நாவலை மையமாகவைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது. Vikas Swarup புகழ்பெற்ற எழுத்தாளரும் ராஜதந்திரியுமாவார். இவரது இந்த நாவலும் பல விருதுகளைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நாவலினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'Slumdog Millionaire' பல விருதுகளை தனதாக்கியிருக்கிறது. அதில் அண்மையில் நடைபெற்ற 66ஆவது Golden Globe விருது வழங்கும் விழாவில் Best Motion Picture - Drama, Best Director - Motion Picture (Danny Boyle), Best Screenplay (Simon Beaufoy), Best Original Score (A.R.Rahman) ஆகிய விருதுகளை தனதாக்கியிருக்கின்றமை சிறப்பம்சமாகும்.

இந்த விருதுவழங்கும் விழா இரண்டு இந்தியர்களுக்கு பெருமை சேர்த்துத் தந்திருக்கிறது. விருதுபெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார். அதேபோல் விழாவில் அறிவிப்புச் செய்த மற்றுமொரு இந்தியர் என்ற பெருமையை பொலிவூட் நடிகர் ஷாருக்கான் பெறுகின்றார்.

No comments: