Friday, January 02, 2009

பட்டாம்பூச்சி...

கண்ணே உன் நினைவுகளை
நெஞ்சுக்குள்ள வச்சிருக்கன்
கண்கள்தான் சாட்சியாக
பட்டாம்பூச்சி பறக்கவைக்கும்
வானவில்லை தொட்டிடவே...

விழிப்பாக நாமிருந்தால்
வலியேதும் தெரியாது...
பழிக்கின்ற உலகத்தை
பிழிந்தெடுத்து வதைத்திடவே
வாழ்ந்துதான் காட்டிடுவோம்...

வாய்ச்சொல்லில் வாழ்ந்திட்டோம்
நிஜவாழ்வை தேடாமல்...
நிழலுலகை நீக்கியின்று
நிஜத்தினை கண்டுவிட்டேன்
இருளகற்றும் முழுமதியாய்
வாழ்வெல்லாம் சேர்ந்துவா,
சோர்ந்துபோன எம்வாழ்வை
சேர்ந்துவாழ்ந்து புதுப்பிக்க...

குறுகிய வாழ்வதனில்
சிறகினால் சீண்டிவாழும்
பட்டாம்பூச்சி வாழ்வதுவாய்
எட்டிப்பார்க்கும் எம்வாழ்வை
எட்டவே வைத்துவிட்டு,
ஒட்டிவாழ ஓடிவா
நீண்டகாலம் வாழவேண்டும்...

No comments: