Thursday, January 08, 2009

பொய்யான வரிகள்..!

இத்தனை தடைகளை
எப்படி தாண்ட வைத்தாய்...
வலிக்காத வரிகளை
வலிமையாய் தேடுகிறேன்
துளிகூட கிடைக்குதில்லை...

தூரிகை கொண்டுன்னை
வரைந்திட்டேன் என்மனதில்
ஆழமாய் பதிந்துவிட்டாய்
அழிக்கத்தான் முடியவில்லை...
துளைக்கின்ற உன்வார்த்தை
துளியேனும் பிடிக்கவில்லை
அழுகின்றேன் மனதார
யாரறிவார் என் சோகம்..!

ஆத்திரத்து வார்த்தைகளை
பொத்தித்தான் வைத்திருந்தேன்
தூக்கியதை தெளித்துவிட்டால்
துடித்துத்தான் போயிடுவாய்...
என்ன நான் செய்துவிட்டேன்
பொய்யான வரிகளென்றாய்..?
மெய்யாக நானுன்னை
தூய்மையாய் நேசித்ததால்
என் அன்பில் தூசு என்கிறாய்...
பழகித்தான் போனதனால்
பழிகூட வலிக்கவில்லை
வாழ்க்கைதான் வெறுக்கிறது..!

இறுக்கமாய் இணைந்திருக்க
பொறுக்காத ஆண்டவனும்
வெறுத்துத்தான் பார்க்கிறான்...
துரத்தித்துரத்தி காதலித்தும்
தூய்மையில்லை என் அன்பாம்...
வாய்ச்சொல்லால் வதைக்கின்றாய்
பொய்யாக சொன்னாலும்
மெய்யாக வலிக்குதடி என்நெஞ்சு...

1 comment:

Kalaimahan said...

மதன்,
உந்தன் புதுக்கவியில்
புதுமைகள் பலசெய்துள்ளாய் நீ!
ஓசைநயத்தோடுள்ள உன்புதுக்கவி
புதுக்கவிதைகளுக்கு
வழிகாட்டட்டும்!
புதுக்கவியோ - மரபோ ஏதாயினும்
ஓசையிருந்தால்
உள்மனதில் அசைந்தாடும்!!
நல்ல கவிவரிகள்!
வாழட்டும் உன்தமிழ்ப்பணி!

அன்புடன்
“இடி” நண்பன்,
கலைமகன்
http://kalaimahanfairooz.blogspot.com