Monday, January 05, 2009

முக்காலம்...

வார்த்தையால் வடித்திட்ட
வலிகளின் வலிமையை
உளிகொண்டு துளைத்திட்ட
பாறையின் பளிங்காய்
செவிப்பறையில் சொல்லிடும்
பிரிவின் துயர்தனில்...

அருகில் நீயிருந்தும்
அரவணைக்க முடிவதில்லை...
பிரிவின் துயரத்தை
எம்மையன்றி யாரறிவர்...
காலம்தான் வீணாகும்
கற்பனையில் வாழ்கையிலே...
சொற்பகால வாழ்வதனை
சொப்பனத்தில் வாழ்கின்றோம்...
வடிக்கின்ற கண்ணீரில்
நிலம்கூட ஈரமாகும்
உளம்மட்டும் கனியாமல்
காயாக இருப்பதேனோ...?

பாயாக விரித்துவைத்த
பாசங்கள் வீணாச்சு...
பாலாக ஊற்றிவைத்த
பாவங்கள் புளித்தாயிற்று...
புதுவாழ்வு தேடியின்று
நெடுந்தூரம் வந்தாயிற்று...
கொடுமையாய் இருக்குதடி
உனைப்பிரிந்து தவிக்கையிலே...

கனவான நம்வாழ்க்கை
நினைவாவதெப்போது...?
அக்கால நினைவெண்ணி
முக்காலமும் வாழ்ந்திடுவேன்...!

No comments: