Tuesday, January 06, 2009

நிலா பெண்...

நிலாவின் நிழலாக
நீ தோன்றினாய்...!
நிஜமாக நீ என்னை
தொடர்வாய் என
நெடுநாளாய் கனவுலகில்
கால் நனைத்தேன்...
ஈரமாகியது கால் மட்டும்தான்
பாரமாகித் தவிக்கிறது
பாவியிவன் உள்ளமது..!

போலியான பாசமென
வேலிபோட்டு காட்டிவிட
நம் காதலொன்றும்
பச்சோந்தி பட்சியல்ல...
பாசத்தின் எல்லைதனை
அடிக்கடி தொட்டுக்காட்டும்
அருகதையற்ற அன்பிற்கு
அடிபணிய தூண்டுவது
அன்பிற்கு இழக்காகுமே..!

பட்டென்று தூக்கியெறிய
பாவியிவன் உள்ளமென்ன
பாவனையற்ற பொருளா..?
யாருமில்லா உலகத்திலே
உன்நிழல்மட்டும் போதுமென
நிஜமாக ஏங்கியது என்தப்பா?
குத்தல் வார்த்தைகளால்
தினம் குத்திக் கிழிக்கிறாய்
புண்பட்ட உள்ளத்தை...
தொல்லையென்றால் சொல்லிவிடு
உன் நிழல்கூட தொடமாட்டேன்...
உன் நினைவென்ற நிஜத்தோடு
அமைதியாய் வாழ்ந்திட
நெடுநாளாய் பழகிவிட்டேன்..!

No comments: