Monday, December 01, 2008

புரிதல்...

முகஸ்துதி பாடி
முதுகினில் குத்தும்
முறையது தெரியாது...
பிடித்ததை பகிர்ந்து
பிடித்தமாய் வாழ்ந்திட
படிப்பினை தேவை
வாழ்வினிலே...

மனதினை வருத்தும்
வார்த்தைகள் கசக்கும்
உண்மைகள்
வெளியானால்...
நிஜத்தினில் வாழ்ந்திட
நிழலது தேவையில்லை
வாழ்வினைப் புரிந்துவிடு...

பாசத்தைப் புதைத்து
வேஷமாய் வாழ்ந்திட
எனக்கது தெரியாது...
நிஜ அன்பைத் தேடும்
மனமதுவை
வேதனை சூழ்வது
சகஜமடி...

புரிதலும் இல்லை
பாசமும் இல்லை
பழிகள் கேட்டேனே...
உரிமைகள் பேசிய
வரிகள் இன்னமும்
உறைக்கின்றனவே...

No comments: