Monday, December 08, 2008

மறுஜென்மம்...

உனக்கும் எனக்கும்
எல்லாம் பிடிக்கும்...
வடிக்கும் கண்ணீரிலும்
உயிர் துடிக்கும்...

மீசை பிடிக்கும்...
கொஞ்சும்போது
உன்கன்னம் துடிக்கும்...
ஆசை பிறக்கும்
கண்கள் சிவக்கும்...
ஆசைப்பட்ட வாழ்க்கை
இதை வாழத் துடிக்கும்...

நெஞ்சு கனக்கும்
அஞ்சித் துடிக்கும்
பிரிவை எண்ணி
தலை இடிக்கும்...
எல்லாம் பிடிக்கும்
பொல்லாப்பில்லா
வாழ்க்கை பிடிக்கும்...

பேசப் பிடிக்கும்
உன் நேசம் பிடிக்கும்
ஆசைப்பட்டு வாழலேனா
சாகப் பிடிக்கும்...
மறுஜென்மத்தில்
ஒன்றாய் சேரப் பிடிக்கும்...

No comments: