Saturday, December 13, 2008

விளக்கீடு...

எத்தனை பௌர்ணமிகள்
இன்பமாய் களிந்தன...
அத்தனையும் தாண்டி
விளக்கீடாய் ஒளித்ததுவே
நேற்றைய பௌர்ணமி...

இதமான மாலையில்
சோலைவன குயிலாக
என்னருகில் நீயிருக்க...
பாலைவனத்து ஊற்றாக
உள்ளத்தில் ஏதோ மாற்றம்...

தள்ளிநின்று பேசியதே
நெடுங்கால வாழ்வாகி
கொடுங்கோலாய் குத்தி நிற்கும்
என் நெஞ்சில்...
நெய் ஊற்றி பற்றாத தீபமாய்
உள்ளத்தில் தீ பற்றும்
என்னருகில் நீயிருந்தால்...

தீபங்கள் ஏற்றிடவே கை துடிக்கும்
உன் கண்கள் பார்த்திடவே
தீப்பொறிகள் பறந்திடுமே
உள்ளத்தின் ஓரமெல்லாம்...

வாழ்வெல்லாம் வசந்தமாய்
பௌர்ணமிகள் வந்திடனும்
பாசத்தின் முழுசுகத்தை
மூச்சுள்ளவரை ரசிக்கவேண்டும்...

சிட்டிகள் சீராக அடுக்கிவைக்க
சிறுகைகள் குழப்பிநிற்க
செல்லமாய் நீ அடக்கிவைக்க
துள்ளியோடும் செல்ல மதுரா!
உன்வரவால் வசந்தமாகும்
எம் வாழ்க்கை... அதுவரை
பௌர்ணமிகள் சாட்சியாகும்
நம் காதலுக்கு...!

No comments: