Wednesday, December 24, 2008

சதையுள்ள கடவுள்...

தமக்கென ஓர் உள்ளம்
இருப்பதை உணர்ந்திடா
செருக்கதில் திரிந்திடும்
விருப்பற்ற உள்ளங்கள்
இருந்தென்ன லாபம்...?

உறைத்திட சொன்னாலும்
மனம் திறந்திடா உள்ளத்திற்கு
பாறைதான் உவமையென
உவர்ப்பான உண்மைதனை
உள்ளத்தால் சொல்லிடுவேன்...

தோழ்கொடுக்கும் தோழனாக
யார்யாரோ வந்துபோக...
தோள்தொய்யும் வேளைதனில்
ஆழரவம் அறிந்திடாமல்
அகன்றிடும் உறவுகளை
வென்றுவந்த தேன்நிலவாய்
உந்தன்தோழி உன்னருகில்...

பால்நிலவின் தேய்தல் கண்டு
பாரதிர தேம்பியழும்
பொய்யற்ற மனமதுவை
மெய்யாக கண்டேனே
மனதார பூரித்தேன்
பூத்தூவி பூஜிக்கிறேன்...

சாதுவாய் இருந்துகொண்டே
சகலதையும் சகித்துக்கொள்ளும்
சதையுள்ள கடவுளாய் காண்கிறேன்...
கண்மூடும்போதெல்லாம்
என்காதில் எதிரொலிக்கும்
என்னவளுக்காய் நீசொன்ன
உபதேச வார்த்தைகள்...

உபத்திரவம் இல்லாத
உண்மையான நட்பதனை
பெற்றிட்ட என்னவளே...
உளம்தொட்டு வாழ்த்துகிறேன்
நட்பென்றால் இதுவல்லோ..!

No comments: