![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI-dG5U1nqMmZDSGc7RczsAzkQy6gExrM8lBubPE3zrt9kexVftdTn-FlLEbovt5naNzKmCIR4zbEwSiPkba6l3NUgPz2-MJqSNQ9aaC1-bRmlGA266TBs4CdpCpkHaZ0U_uQKqYg6_FE/s400/1.jpg)
பரவசம் எனக்கு...
உணர்வுகள் பொங்க
வானலை தந்த
வசந்தகால வாசனை...
பலமணிநேரம் பரவசம் தந்த
வார்த்தைகள் பரிமாற்றம்
என்னுள் எத்தனை
மாற்றங்கள் செய்ததடி...
முழுமதி காணும்போதெல்லாம்
முன்னைய நினைவுகள்
மனதினைக் குடையுதடி...
ஏணியில் ஏறி மதிதனை அணைத்திட
மனமிங்கு ஏங்குதடி...
எட்டா தூரத்திலிருக்கும் மதியே!
கிட்டவந்து என் மனதை தழுவாயோ?
உனைத் தொட்டிடத்தான் ஏறிவந்தேன்
பத்தவில்லை ஏணி இன்னும்...
No comments:
Post a Comment