Friday, December 05, 2008

வார்த்தையால கொன்னுபுட்ட...

வார்த்தையில
விரசம் வச்சு
பார்க்கச்சொல்லி
நான் கொடுத்தேன்...
பாத்துபுட்டு
ரெண்டுநாளா
பரிதவிக்க வச்சீயே...
வார்த்தையொன்றும்
பேசவில்லை
மௌனத்தால
கொன்னுபுட்டே...

அப்புறமா கதைக்கயில
"வார்த்தையால வர்ணிச்சு
கன்னி களிச்சுபுட்ட..."
என்று நீ சொல்லியத
நெஞ்சுக்குள்ள வச்சிருக்கன்...
எக்குதப்பா எழுதிபுட்ட
வருத்தத்தில நானிருக்க
வார்த்தையொண்டு
சொன்னாயே
வயசுபுள்ள நீயெனக்கு...
வாக்கபட்ட சந்தோஷத்த
தந்தவார்த்த இதுதானோ
என் செல்லத்தங்கமே...
"கவிதையால கற்பழிக்க
எனக்குத் தெரியாது...
தெரிஞ்சிருந்தா
புள்ள இருக்கும்
இன்னேரம்
உன் வயித்தில..."

No comments: