Wednesday, December 17, 2008

பிடிக்காத பிரிவு...

பிரிவுகள் எனைநாடி
அனுதினம் உறவாடும்...
பிடிக்காத தனிமையினை
திணித்திங்கு வசைபாடும்...
உள்ளத்தின் பள்ளமெல்லாம்
துன்பத்தின் நிறைவாகும்...
சொல்லாத உணர்வுகள்
தணலாக கொதித்திடுமே..!

இருக்கின்ற போதிலும்
பார்க்காத தனிமைகள்
வியர்வையாய் கரைந்தோடும்...
துரத்தும் தனிமையை
தூரத்தில் இருக்கையில்
உருக்கமாய் உணர்ந்திடுவேன்...
நெருக்கமாய் இருக்கின்ற
வார்த்தைகளின் ஈரத்தை
பிரிவென்னும் வரட்சியில்
பெரிதாக உணர்ந்திடுவேன்...

சிறிதான இன்பங்கள்
பெரிதாக வலிதருமாம்...
உணர்கின்றேன் உண்மையினை
பிரிந்துன்னை இருக்கையிலே...
உள்மனதின் உயிரோட்டம்
சிந்தனையின் சிகரம் தொடும்...
பிரிவென்ற சொல்லதனை
பிரியாத என் வாழ்வில்
புரியாத கேள்விகள் பல
தெரியாமல் தோன்றி என்னை
சிதறடிக்கும் சிந்தனையை...

வார்த்தையால் சேர்ந்திட்ட
வளமான வாழ்வதுவில்
பிரிவென்ற சொல்லதனை
வெறுக்கின்றேன் மனதார...
பிரியாத சொந்தமாக
உயிரோடு சேர்ந்துவா
என் இனியவளே...!

No comments: