Monday, December 22, 2008

என் தோஷம்...!

பிடிப்பில்லை என்பதனை
பிடித்தமாய் நீயுரைப்பாய்
துடிப்பது கொஞ்சமாயிருக்கும்
என் நெஞ்சமல்லவோ...?

அடிக்கடி இடம்மாறும்
இதயத் துடிப்பினை
நிறுத்திடவே எண்ணிடுவேன்
கன்னியவள் உன்நினைவு
சிந்தனையை சிதைத்திடுமே...
என் இதயம் துடிப்பது
உனக்காகவல்லவோ...?

எதற்காக வீண் சண்டை...?
வேஷமில்லா பாசம் வைத்தது
என் தோஷமா...?
புரியாத உள்ளமென
பிரித்தென்னை பேசாதே
எரிகிறது என் நெஞ்சம்...!

இப்போது எனக்கும் புரிகிறது
பாசங்கள் கூடினாலும்
தோஷங்கள் அதிகரிக்குமாம்..!
எனக்கேதும் புரியவில்லை
வாழ்க்கையின் தத்துவமது..!

பிரிந்துவிடு என்றுரைத்து
சிதறிய இதயத்தை
பிய்த்துப் பார்க்கிறாய்...!
பிய்த்தாலும் பரவாயில்லை
ஒய்யாரமாய் நீயிருப்பாய்
என் உயிர் துடிக்கும்
எல்லைதனில்...!

No comments: