Wednesday, December 03, 2008

காத்திருப்பேன் உனக்காக...

எண்ணற்ற ஆசைகளை
மண்ணுக்குள் புதைத்துவைக்க
மார்புதட்டி முன்சென்றேன்...
கண்ணுக்குள் இருந்த கனவு
கானல்நீர் ஆகிடாமல்
வாய்விட்டு அழுதுவிட்டேன்...

பார்போற்ற வாழ்ந்திடவே
ஊர்தெரிந்து பழகிட்டோம்...
யார்கண் பட்டதுவோ
கண்ணீரில் மிதக்கின்றோம்...
பிரிவொன்று வந்திடுமோ
ஏக்கத்தில் தவிக்கிறேன்...
மாற்றங்கள் வேண்டுமென
வரமொன்று கேட்கிறேன்...

நெஞ்சத்தின் சுமைகளை
ஆமையாய் நகர்த்திறேன்...
சேதாரம் அதிகமாகி
மனதார தவிக்கிறேன்...
ஆதாரம் இல்லாமல்
பிரிவெண்ணி வெம்புகிறேன்...

என் அன்பு நிலைத்திடவே
துன்பத்தை எனதாக்கினேன்...
உன் அன்பு வேண்டுமென
மனதார காத்திருந்தேன்...
வெகுநாளாய் காத்திருந்த
காதலின்று வேதனையில்
சோதனை காண்கிறதே...!
நினைவிழந்த அன்புலகில்
கால்பதித்து நீ வரவே
காத்திருப்பேன் உனக்காக...

No comments: