Monday, December 08, 2008

பிரிவு...

இறுக்கமான பிணைப்பு ஒன்றை
உருக்கமாக வச்சிருக்கேன்...
பிரிவின் வலி என்னவென்று
ரெண்டு நாளில் அறிந்துவிட்டேன்...

கடல்தாண்டி போகவில்லை
இடம்தாண்டி போயிருந்தேன்...
மண்தோண்டி புதைத்ததுபோல்
தனிமையில தவிச்சிருந்தேன்...

எத்தனையோ சொந்தங்கள்
சுற்றிசுற்றி வந்தாங்க...
அத்தனையும் பிடிக்கவில்லை
நீ அருகில் இல்லையென...

இனம்புரியா துன்பமதை
இன்பமாக ஏற்றிருந்தேன்...
கண்ணுக்குள்ள நீயிருந்து
கண்ணாம்பூச்சி ஆடியிருந்த...

தண்ணிக்குள்ள குளிக்கையில
என் கண்கள் கலங்கியதே...
என்னவளின் விருப்பமதில்
நீச்சல் தடாகமும் ஒன்றல்லவோ...!

மரத்தோரம் இரு இருக்கைகளை
இறுக்கமாக பார்த்திருந்தேன்...
உரிமையோடு இருக்கையிலே
உறங்க வேண்டும் உன்னோடு...

கிடைக்கின்ற இடைவெளியில்
வெகுநேரம் கதைத்திருந்தேன்...
ஆனாலும் என் மனதுக்குள்
தனிமைதான் தாக்கியிருந்தது...

சிறுபிரிவே என் மனதை
அரிவாளால் வெட்டிடுது...
நிரந்தரப் பிரிவென்றால்
நெஞ்சம் வெடித்திடுமே...!

எண்ணங்கள் சிதைகிறது
எண்ணியதைப் பார்க்கையிலே...
பிரிவென்ற சொல்லதுவே
எம்வாழ்வில் பிரிந்திடட்டும்...

No comments: