Thursday, December 18, 2008

முத்தமழை...

கருமேகப் படைகள்
போர்க்கொடி உயர்த்த...
காற்றின் தளபதி
கட்டளை பிறப்பிக்க...
ஈற்றில் மழைமேகம்
சாரலாய் பொழிந்திட
புண்பட்டது ஈருள்ளம்...!

கருமேகத் தாக்குதலில்
கட்டுண்ட காரணத்தால்
ஒட்டித்தான் உறவாட
மனம் துடித்திடுமே...
உறவாடும் வேளையில்
பத்திரிகைச் செய்திக்காய்
மின்னலும் படம்பிடிக்கும்...

கொடியிடையாள் கொந்தழித்து
கோவமாய் பார்க்கையிலே
கண்கள் சிவந்திடுமே...
பாவமாய் பார்த்துன்னை
பறந்தோடி அணைத்திடவே
கிறங்கித்தான் போயிடுவாய்
இறுக்கமான அணைப்பினிலே...

கருமேகப் பொழிவினால்
உடைகள் நனைந்திருக்க...
இருவிழிப் பார்வையால்
உள்ளத்தில் சொல்லொனா
மின்னல் பாய்ச்சும்...
இன்பத்தில் நம்
உள்ளம் நனையும்...

போர்தொடுத்த கருமேகம்
காதலின் சுகங்கண்டு
இடியாக மேளம் கொட்டி
மழையாக மலர் தூவும்...
வெகுநேரம் நனைந்ததனால்
வெடவெடக்கும் உன்னுடம்பு...
படபடக்கும் உள்ளத்தோடு
அருகில் வந்து அணைத்துன்னை
முத்தமழையில் மீண்டும்
முழுதாக நனையவைப்பேன்
என் முழு நிலவே...
ஈரத்தில் உடல் நனைய
பூரிப்பில் உளம் நனையும்...

No comments: